திருப்பூர், மார்ச் 16 – தொற்று நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு வழங்க தூய்மைப்பணி செய்யும் ஊரக உள்ளாட்சி ஊழியர்களுக்கு உட னடியாக பாதுகாப்பு உபகர ணங்கள் வழங்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் கோரியுள்ளது. திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஐநூறுக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் திங்க ளன்று மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் பி.பழனி சாமி, மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் உள்பட ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினர். சிஐடியு சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்தி கேயனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள டேங்க் ஆபரேட்டர்கள், துப்பு ரவு ஊழியர்கள் மற்றும் தூய் மைக் காவலர்களாக உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்க ளின் ஊதிய நிலுவைத் தொகை கள், பணிக்கொடை ஓய்வூதியம், அடையாள அட்டை ஆகிய பல கோரிக்கைகளை சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்கம் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் ஏழாவது ஊதி யக்குழு ஊதியம், நிலுவைத் தொகைகள் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் வழங்கப்படவில்லை. அதோடு தணிக்கை ஆட்சேபணை என்று காங்கேயம் ஒன்றியத்தில் வழங்கப்பட்ட ஊதியத்தைக்கூட பிடித்தம் செய்கின்றனர். இது குறித்து ஆட்சியர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் டேங்க் ஆப ரேட்டர்களை காலமுறை ஊழி யர்களாக்கி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தூய்மைக் காவலர்களை ஊராட்சி ஊழி யர்களாக்கி ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அரசாணை (எம்எஸ்) 14ன்படி துப்புரவு ஊழியர்களை சிறப்பு காலமுறை ஊழியர்களாக்க வேண்டும். தொட்டி சுத்தம் செய்யும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு ரூ.1000 படி வழங்க வேண்டும், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதுடன், துப்புரவுத் தொழிலாளர், தூய்மைக் காவலர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். அரசாணை 2 (டி) 62ன்படி டேங்க் ஆப்ரேட்டர், துப்புரவு ஊழியர்களுக்கு குறைந் தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவதுடன், உள் ளாட்சி நிர்வாகங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று சிஐடியு ஊரக உள்ளாட் சித் துறை ஊழியர் சங்கம் கோரி யுள்ளது.