திருப்பூர், நவ. 1- பல்லடம் அருகே கூட்டம் கூட்டமாக வீடுகளுக்குள் பரவும் ஈக்களை கட்டுப்ப டுத்தவும், முறைப்படி சுகாதார வசதிகளை பின்பற்றாத கோழிப்பண்ணை நிறு வனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கறிக் கோழி உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. அதோடு கறிக்கோழிகளை உற் பத்தி செய்வதற்கான தாய் கோழிப் பண் ணைகளும் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள கோழிப் பண்ணைகளில் நிர் வாகத்தினர் தேவையான சுகாதார வசதி களை சரிவர மேற்கொள்வதில்லை என ஏற்கெனவே பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழைக்கு மத்தியில் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் கும்பலாக வீடுக ளுக்குள் பரவும் ஈக்களால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதன் மூலமாக தொற்றுநோய்கள் பரவும் முன் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றிய செய லாளர் ஆர்.பரமசிவம் மாவட்ட ஆட்சியரின் நேரடி புகார் பதிவு அலைபேசி எண்ணுக்கு வியாழனன்று புகார் மனு அனுப்பியுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது, பல்லடம் ஒன்றியம், புளியம்பட்டி கிராமத்தில் 500-க் கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிரா மத்தில் தாய் கோழிப் பண்ணைகள் அதி களவில் உள்ளன. தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், கோழிப் பண்ணை நிறுவனங்கள் முறையான சுகாதார வசதிகள் எதையும் பின்பற்றுவ தில்லை. இதனால் கிராமத்திலுள்ள வீடு களை நோக்கி ஈக்கள் கூட்டம் படையெடுத் துள்ளது. குடிநீர், பாத்திரங்கள் என அனைத் திலும் ஏராளமான ஈக்கள் நிறைந்து இருக் கின்றன. இதனால் குழந்தைகள், பொது மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே மாவட்ட ஆட்சி யர் தலையிட்டு இந்த சுகாதார சீர்கேட்டை தடுத்திடவும், கோழிப்பண்ணை நிறுவனங் களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் எனத் தெரிவித்துள் ளார்.