திருப்பூர், நவ.7- சோற்றில் கூட பூசணிக்காயை மறைக்கலாம், ஆனால் காற்றில் மறைக்க முடியாது முதல்வர் எடப் பாடியார் அவர்களே என்று உயர் மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனருமான வழக் கறிஞர் ஈசன் விடுத்துள்ள அறிக்கை யில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக முதல்வர் வெள்ளியன்று திருப்பூர் மாவட்டத்திற்கு ஆய்வு பணிக்காக வருகை புரிந்தார். ஏற் கனவே அவரை சந்திப்பதற்கு அனு மதி கேட்டிருந்தும், மாவட்ட நிர்வா கம் அதற்கு அனுமதி கொடுக்க வில்லை. முதல்வர் திருப்பூரில் செய் தியாளர்களை சந்தித்தபோது, மாற்று வழியில் (கேபிள் மூலமாக) உயர் மின்னழுத்த மின்சாரத்தை கொண்டு செல்வது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழகத்திற்கு மின்சாரம் கொடுப் பதற்காக அண்டை மாநில விவசா யிகளே முழுமனதுடன் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கும் போது, தமிழக விவ சாயிகள் போராடக் கூடாது எனவும் மின்சாரம் அனைத்திற்கும் மிகவும் அத்தியாவசியமாக உள்ளது என முதல்வர் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் உண்மைகளை திட்டமிட்டு மறைத்துள்ளார், அதோடு உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சுய நலக்காரர்கள் போல் சித்தரித்து உள் ளார். எனவே அவருடைய இந்த தவ றான கருத்துக்கு தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்ட னத்தை தெரிவித்துக்கொள்கிறது. நான்காண்டுகளாக நியாயமான கோரிக்கையுடன் போராடி வரும் உழவர்களை அழைத்து பேசாமல் எதற்கெடுத்தாலும் உழவன் மகன் என்று சொல்லிக் கொள்ளும் முதல் வர், அதற்கு தகுதியானவர் இல்லை. தமிழகத்திற்கு வேறு மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வர வேண்டி இருக்கிறது என்றால், மின் மிகை மாநிலம் என்று சொல்லி வரு வது பொய் தானே? நெய்வேலி, கல்பாக்கம், கூடங் குளம் ஆகிய இடங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்காக தமிழக விவசாயிகள் நிலங்களை கொடுத் துள்ளதை நாடே அறியும் அது ஏன் முதல்வர் கண்களை மறைக்கிறது?
கொச்சியிலிருந்தும், குஜராத்தின் போர்பந்தரிலிருந்தும், ஆப்பிரிக்கா விற்கு 3000 கிலோ மீட்டர் தாண்டி பிரதமர் கேபிள் அமைப்பது முதல்வ ருக்குத் தெரியாதா? சென்னை யைச் சுற்றி 400 கிலோ வாட் மின் சாரத்தை 110 கிலோ மீட்டர் தூரத் திற்கு கேபிள் அமைப்பதற்கும், கட லோர மாவட்டங்களில் உயர்மின் கோபுரங்களை கேபிளாக மாற்றுவ தற்கு ரூ.3 ஆயிரம் கோடி இவர் தானே நிதி ஒதுக்கி உள்ளார், அது மறந்துவிட்டதா? மத்திய அரசின் பவர்கிரிட் நிறு வனம் இலங்கைக்கு கேபிள் அமைத்து மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கு இசைவு தெரிவித்து கையெழுத்திட்டது இவர்தானே, அது மறந்துவிட்டதா? பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் வாடகையும், சந்தை மதிப் பில் இழப்பீடும் கொடுக்காமல் நான் காண்டுகளாக விவசாயிகளை ஏமாற்றி வருவதையும், இவர் முன்பு சட்டசபையில் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி ஒரு கிலோ மீட்டர் தூரம் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு 4 கோடி ரூபாயை இழப்பீடாக கொடுக்கிறோம் என்று அறிவித்தார், அதை கொடுத்தார் களா?
அது சம்பந்தமாக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? உண் மைகள் இவ்வாறு இருக்க உழவன் மகன் என்று சொல்லிக்கொண்டு விவசாயிகளை இவர் ஏமாற்றி வரு வதை தமிழகம் நன்கு அறிந்து வைத்திருக்கிறது. எனவே, இவரது பொய்க் கூற்று களை உடைத்து தமிழக மக்கள் முன்பு உண்மைகளை அம்பலப்பத் படுத்துவோம். இதுபோன்ற பொய் களை நம்புவதற்கு தமிழக மக்க ளும், விவசாயிகளும் ஒன்றும் முட் டாள்கள் இல்லை என அந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.