திருப்பூர், செப். 2 – தமிழக அரசு தற்போது செயல் படுத்தி வரும் அத்திக்கடவு – அவி நாசி திட்டத்தில் திருப்பூர் ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள குட்டைகளைச் சேர்க்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச் சாமிக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள் ளது. இதுதொடர்பாக விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவர் கே.ரங்கசாமி, செயலாளர் எஸ்.அப்புக்குட்டி, பொருளாளர் ஆர்.ஆறுமுகம் ஆகியோர் செவ்வாயன்று முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: பொங்கு பாளையம் ஊராட்சி்க்கு அருகில் உள்ள ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி மற்றும் பழங்கரை ஊராட்சிக்கு உட் பட்ட குட்டைகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், இவை இரண்டுக்கும் மையத்தில் இருக்கும் பொங்குபாளையம் ஊராட்சி விடுபட் டுள்ளது. இந்த ஊராட்சி மழையளவு குறைவாகப் பெறும் பகுதியாகும். இதனால் நீராதாரம் இல்லாமல், ஆழ்குழாய் கிணறுகள் 1000 அடி ஆழம் வரை தோண்ட வேண்டிய நிலையில் உள்ளது.
விவசாயத்துக்கும், மக்கள் குடிநீருக்கும், வாழ்வாதாரத்துக்கும் கடும் சிரமம் உள்ளது. எனவே பரம சிவம்பாளையம் கருப்பராயன் கோயில் அருகில் உள்ள குட்டை, மாரப் பம்பாளையம் புதூர் தலையாரித் தோட்டம் அருகில் உள்ள குட்டை, வல்லங்காடு பெரியதோட்டம் மத்தி யில் உள்ள குட்டை மற்றும் சாமக் காடு அருகில் உள்ள குட்டை, பள்ளி பாளையம் க.ச.எண் 220 மற்றும் 225 ஆகியவற்றில் உள்ள இரு குட்டைகள், காளம்பாளையம் ஆசாந்தோட்டம் குட்டை, பரமசிவம்பாளையம் தலை வெட்டிபாலத்தில் இருந்து மாரப்பம் பாளையம் புதூர் அருகில் சென்று பள்ளிபாளையம் வரை செல்லும் ஓடை ஆகியவற்றை அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சேர்க்க வேண் டும். குறிப்பாக தலைவெட்டிபாலத் தில் இருந்து பள்ளிபாளையம் வரை ஓடையில் 15க்கும் மேற்பட்ட தடுப்ப ணைகள் உள்ளன. எனவே, இந்த குட்டைகளை அத்திக்கடவு திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் இந்த ஊராட்சியில் நிலத்தடி நீராதாரத்தை அதிகரிப்பதுடன் விவ சாயம் மற்றும் குடிநீர் பிரச்சனை களைத் தீர்க்க முடியும். தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் ஏற்கெனவே இக் கோரிக்கையை வலியுறுத்தி உள்ளது. எனவே தமிழக முதல்வர் இந்த ஊராட்சி குட்டைகளை சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.