tamilnadu

img

திருப்பூரில் மூங்கில் பண்ணை சிறுவர் பூங்கா அமைக்கும் நிகழ்வு

திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சி சின்னகாளிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வனத் துக்குள் திருப்பூர் அமைப்பினர் மூலமாக மூங்கில் பண்ணை சிறுவர் பூங்கா அமைக்கும் நிகழ்வு திங்களன்று நடைபெற்றது. இதில், பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கரைப் புதூர் ஏ.நடராஜன், இடுவாய் ஊராட்சிமன்ற தலைவர் கே.கணே சன், வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் தலைவர் சிவ ராமன், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, மத்திய அரசின் ஐஎப்ஜிடிபி நிறுவன இயக்குனர் குன்னி கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.