திருப்பூர், மார்ச் 14- திருப்பூரில் 100 பேருக்கு மேல் பணிபுரியும் பனியன் கம்பெனிக ளில் தொழிலாளர்களுக்கு இலவச குடியிருப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டுமென அனைத்து பனியன் தொழிலாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூரில் அனைத்து பனி யன் தொழிலாளர் சங்கக் கூட்டம் ஐஎன்டியுசி அலுவலகத்தில் சனி யன்று ஐஎன்டியுசி தொழிற்சங் கத்தின் நிர்வாகி டி. கே .என். தண் டபாணி தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் சிஐடியு சங் கத்தின் நிர்வாகிகள் மூர்த்தி, சம்பத், ஈஸ்வரமூர்த்தி, ஏஐடியுசி சங்கத்தின் சேகர், பழனிச்சாமி, எல்பிஎப் சங்கத்தின் ராமகிருஷ் ணன், பூபதி, பாலசுப்பிரமணி, ஏடிபி கண்ணப்பன், குணசேக ரன், ஐஎன்டியுசி பெருமாள், சிவ சாமி, எச்எம்எஸ் முத்துச்சாமி, குண சீலன், எம்எல்எப் மனோகரன், பெருமாள், வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் பின்வரு மாறு: பனியன் தொழிலாளர்க ளுக்கு 8 மணி நேர வேலைக்கு 2020 ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் ஒப்பந்த சம்பளத்தில் இருந்து 90 சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டும். பீஸ் ரேட் தொழிலா ளர்களுக்கு அனைவருக்கும் நடை முறை சம்பளம் 90 சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டும். தற் பொழுது வழங்கப்பட்டிருக்கும் பயணப்படி ரூ.20 என்பதை ரூ.50 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 100 பேருக்கு மேல் பணிபுரியும் பனியன் கம்பெனிகளில், தொழி லாளர்களுக்கு இலவச குடியிருப் புகளை ஏற்படுத்தி தர வேண்டும். கம்பெனியில் பணியாற்றும் தொழிலாளர்கள் இருபாலருக்கும் திருமண உதவித் தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்காலத்தில் இறக்கும் பனியன் தொழிலாளர் குடும்பத் திற்கு, குடும்பப் பாதுகாப்பு நிதி யாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். 250க்கும் மேற்பட்ட பனியன் தொழிலாளர்கள் பணி புரியும் நிறுவனங்களில் கூட்டு றவு சிக்கன கடன் சங்கம் அமைக்க வேண்டும். முதலுதவி பெட்டி, அவசர மருந்து இருப்பு மற்றும் சானிட்டரி நாப்கின் வைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவச உடல் முழு மருத்துவ பரிசோதனை செய்து கொடுக்க வேண்டும். செக்கிங் பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண் டும். பெண் தொழிலாளர்களுக்கு ஆறு மாதம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.