திருப்பூர், ஆக. 24- திருப்பூரில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தோருக்கு உடனடியாக மின் இணைப்பு தராமல் இழுத்தடிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளித் துள்ளனர். எனவே, உடனடியாக மின் இணைப்புகளை மின்வாரியம் வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மின்வாரியத்தில் கட்டுமானங்களுக்குக் கட்டுமான நிறைவு சான்று வழங்கினால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என அண்மையில் மின் வாரியம் அறிவித்துள் ளது. இது பொதுமக்களை பெரும் சிரமத் திற்கு ஆளாக்கி வருகிறது. தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் கட்டப் படும் கட்டுமானங்களுக்கு கட்டுமான நிறை வுச் சான்று கேட்கப்படாமல் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு வந்தது.
ஆனால், திடீ ரென்று எந்தவொரு முன்னறிவிப்பும் இல் லாமல் தமிழகம் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க சி.எம்.டி.ஏ, டி.டி.சி.பி, உள்ளாட்சி அமைப்பு என ஏதேனும் ஒன்றின் சார்பில் கட்டுமான நிறைவு சான்று வழங்கினால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்வாரியம் அறி வித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் தற் போது வீடுகள், வர்த்தகக் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க கட்டுமானப் பணி கள் நிறைவுச் சான்றிதழ் கட்டாயம் தர வேண்டும் என பொதுமக்களை மின்வாரி யத்தினர் அலைக்கழித்து வருகின்றனர். இதனால் மின் இணைப்புப் பெறுவதற்கு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின் றனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் வீடு, கடைக ளுக்கு விண்ணப்பித்த ஒரே நாளில் மின் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இது வரை மின் இணைப்பு வழங்காமல் மின் வாரி யத்தினர் அலைக்கழிப்பதாக பொது மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
குடியிருப்புகளைப் பொறுத்தவரை, 12 மீட்டர் உயரம் உள்ள வீடுகள், மூன்று வீடுகள் அடங்கிய தொகுப்பு, 750 சதுர மீட்டர் வரை கட்டப்படும் கட்டிடங்கள், தொழிற்சாலை வகையில் இடம் பெறும் கட்டுமானங்களுக்கு பல புதிய மின் இணைப்புகள் வழங்க, கட்டுமான நிறைவு சான்று தேவையில்லை என்ற நிலையி லும் அந்த சான்றிதழ் பெற வேண்டும் என அதிகாரிகள் தற்போது வற்புறுத்துகின்ற னர். அதேசமயம் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகங்களுக்குச் சென்று பொதுமக்கள் கட்டுமான நிறைவுச் சான்றி தழ் கேட்டால், சொத்து வரி விதிப்பிற்கு விண்ணப்பிக்கும்போது கட்டுமானப் பணி கள் நிறைவு பெற்ற கட்டிடங்களுக்கு மட் டுமே வரி விதிப்பு செய்யப்படுகிறது.
சொத்து வரி விதிப்பு ரசீது அடிப்படையில் கட்டுமான பணிகள் முற்றிலும் நிறைவு பெற் றதாக கருதி மின் இணைப்பு வழங்க வேண் டும் என கூறுகின்றனர். மின்வாரியம் சான் றிதழ் கேட்பதும், உள்ளாட்சி அமைப்புகள் சான்றிதழ் தராமல் காரணம் சொல்வதும் மக்களிடையே வேதனையை அதிகரித்துள் ளது. எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சி யர் உரிய விசாரணை நடத்தி, மின் இணைப் புக்கு விண்ணப்பம் செய்துள்ள அனைவ ருக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொமுச செயலாளர் அ.சரவணன் மாவட்ட ஆட்சி யருக்கு அளித்துள்ள மனுவில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஏற்கெனவே கொரோனா காலத்தில் பல்வேறு சிரமங்க ளுக்கு இடையே வீடுகள், வர்த்தகக் கட்டி டங்கள் கட்டி இருக்கும் நிலையில், மின்வாரி யத்தினர் திடீர் திடீரென விதிமுறைகளை அறிவித்து மக்களை அலைக்கழிப்பதை ஏற்க முடியாது என்றும் பாதிக்கப்பட்டோர் வேதனை தெரிவித்துள்ளனர்.