tamilnadu

img

உரிய காலத்தில் முடிக்காத குடிநீர் திட்ட பணியால் நெருப்பெரிச்சல் பகுதி மக்களுக்கு இடையூறு

திருப்பூர், மார்ச் 16 - திருப்பூர் மாநகராட்சி 18ஆவது வார்டு நெருப்பெரிச்சல் பேருந்து நிறுத்தம் அருகில் குடிநீர் குழாய் பதிப்பதற்காகத் தோண்டப்பட்ட குழி கடந்த 10 நாட்களாக வேலை முடிக்கப்படாமல், அவ்வழியில் செல்வோருக்கு அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. அந்த வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன. திங்களன்று ஒரு மணி அளவில் அந்த வழியாக வந்த லாரி ஒன்று, விலகிச் செல்ல வழியில்லாமல் பின்னோக்கி சென்றபோது அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் துண்டாகி உடைந்துவிட்டது. மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்த ஆபத்தான நிலையில், பொதுமக்கள் நூலிழையில் தப்பித்தனர். மாநகராட்சி நிர்வாகம் செய்யவேண்டிய பணிகளை உரிய காலத்தில் செய்யாமல் காலம் தாழ்த்துவதால் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. மாநகராட்சி குடிநீர் வழங்கல் துறையினர் இந்த பணியை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இதுபோன்ற பணிகளைச் செய் யும்போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த 10 தினங்களாக ஜே.ஜே.நகர் சென்று வரவேண்டிய அரசு பேருந்து சென்று வராத காரணத்தால், பொதுமக்கள் நெருப்பெரிச்சல் வந்து பேருந்தில் செல்ல வேண்டிய சிரமம் உள்ளது. எனவே மாந கராட்சி நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என இப்பகுதி மக்கள் வற்புறுத்து கின்றனர்.