திருப்பூர், மார்ச் 10 - 14ஆவது ஊதியப் பேச்சு வார்த்தைக்கு தேதி நிர்ணயிக்க வலியுறுத்தி திருப்பூர் அரசுப் போக்குவரத்து பணிமனையில் காத்திருப்புப் போராட்டம் நடத்த வந்த தொழிலாளர்களை உள்ளே அனுமதிக்காமல் கதவைப் பூட்டி யது நிர்வாகம். இதைக் கண்டித் துப் போராட்டம் நடத்தி கதவை திறக்கச் செய்து காத்திருப்புப் போராட்டத்தைத் தொழிலாளர் கள் வெற்றிகரமாகத் தொடங்கி னர். தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத் தொழிலாளர்களுக்கான 14ஆவது சம்பள ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு தேதியை அறிவிக்க வலியுறுத்தியும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.8ஆயிரம் கோடி அகவிலைப்படி உள்ளிட்ட நிலு வைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் முன்பாக காத்திருப்புப் போராட்டம் நடத் துவது என அரசுப் போக்குவரத் துத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி திருப்பூர் - காங் கேயம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்து திருப்பூர் மண்டல அலுவலக வளாகத்தில் காத்தி ருப்புப் போராட்டம் நடத்து வதற்காக சிஐடியு, எல்பிஎப், ஏஐடியுசி, டிடிஎஸ்எப், எச்எம்எஸ், ஐஎன்டியுசி, ஏஏஎல்எல்எப், எம்எல்எப் உள்ளிட்ட சங்கங்க ளின் தொழிலாளர்கள் ஏராளமா னோர் செவ்வாயன்று காலை அங்கு திரண்டனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று பணிமனையின் கதவை இழுத் துப் பூட்டி வைத்திருந்தது நிர் வாகம். அத்துடன் காவல் துறையினருக்கும் தகவல் தெரி வித்து வரவழைக்கப்பட்டிருந் தனர். கடந்த காலங்களில் பணி மனை வளாகத்திற்குள் ஒரு பகுதி யிலேயே இது போன்ற காத்தி ருப்புப் போராட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. எனவே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று காவல் துறையினரிடம் தொழிற் சங்கத் தலைவர்கள் கோரினர். ஆனால் நிர்வாகம் அனுமதிக்க வில்லை என்று காவல் துறை யினர் பதிலளித்தனர். அப்படி யானால் பணிமனைக்கு வெளியே சாலையோரம் சாமியானா பந் தல் அமைத்து காத்திருப்புப் போராட்டத்தை நடத்துவோம் என்று தொழிற்சங்கத்தினர் கூறினர். ஆனால் வெளியே போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று காவல் துறையி னர் மறுப்புத் தெரிவித்தனர். இதனால் கோபாவேசம டைந்த தொழிலாளர்கள், ஒன்று தொழிலாளர்கள் காத்தி ருப்புப் போராட்டம் நடத்த வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும், இல்லாவிட்டால் சாலை மறியல் செய்வோம், பணியில் இருக்கும் தொழிலாளர் களை பேருந்தை நிறுத்திவிட்டு இங்கு திரண்டு வந்து இப் போராட்டத்தில் கலந்து கொள்ள வும் அழைப்பு விடுப்போம், கைது செய்தாலும் சந்திக்கத் தயார் என்று உறுதியுடன் கூறினர். இதையடுத்து நிர்வாகத்துடன் பேசுவதாக சொல்லிவிட்டு காவல் துறையினர் சென்றனர். அமைதியான முறையில் வளாகத் துக்குள் காத்திருப்புப் போராட் டம் நடத்துவதற்கே ஒரு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தொழிலாளர் கள் தமிழக அரசுக்கும், போக்கு வரத்துக் கழக நிர்வாகத்துக்கும் கண்டன முழக்கமிட்டு எதிர்ப் பைத் தெரிவித்தனர். இதன் பிறகு காவல் துறை யினர் உள்ளே அனுமதிப்பதாக தொழிற்சங்கத்தினரிடம் கூறினர். உடனே தொழிலாளர்கள் பூட் டப்பட்ட கதவை தள்ளிக் கொண்டு முழக்கமிட்டவாறு பணிமனை வளாகத்திற்குள் சென்று காத் திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இப்போராட்டத்தில் சிஐடியு போக்குவரத்து மண்டல நிர் வாகிகள் பி.செல்லதுரை, என்.சுப்பிரமணியம், எல்பிஎப் நிர் வாகிகள் சென்னியப்பன், துரைசாமி, ஏஐடியுசி நிர்வாகி சண்முகம், டிடிஎஸ்எப் நிர்வாகி துளசிமணி உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். இதில் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்றோரின் அகவிலைப் படி நிலுவைகளை வழங்க வேண்டும், வேலைப் பளுவைத் திணிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன. மேலும், தமிழக அரசு சம்பள ஒப்பந்தத் தேதியை அறிவிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்க தலைவர்கள் கூறினர். இப்போராட்டத்தில் பெருந்திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.