tamilnadu

img

வதந்திகளை பரப்ப வேண்டாம் வட்டார மருத்துவ அலுவலர் வேண்டுகோள்

தாராபுரம், மார்ச் 25 - தாராபுரம் பகுதியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என வட்டார மருத்துவ அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தாராபுரம் பகுதியில் கரோனா பாதிப்பு குறித்து சமுக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் தாராபுரம் வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய கொண்டரசம் பாளையம், மணக்கடவு, பொம்மநாயக்கன்பட்டி, ஹவுசிங் யூனிட், கணபதிபாளையம் பகுதிகளை சேர்ந்த 6 பேர் கண் காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காரோனா தொற்று இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப் பில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சமுக வலைத்தளங்க ளில் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக பரப்பி வரு கிறார்கள்.  இதனால் கண்காணிப்பில் உள்ளவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதில் ஒரு இளைஞர் தற் கொலைக்கு முயன்றுள்ளார். அந்த இளைஞருக்கு கவுன் சிலிங் அளிக்கப்பட்டுள்ளது. எனவே சமூக வலைத்தளங் களில் வதந்திகளை பரப்பவேண்டாம் என்றார். மேலும் தாராபுரம் பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் எடுக்கப்பட்டு வருகி றது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் தெரிவித்தார். மருத்துவ அலுவலர்கள் விக்னேஷ், ரம்யா, ஹேமா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சௌந்திரராஜன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜி, நவீன் ஆகியோர் உடனிருந்தனர்.