tamilnadu

img

அவிநாசி முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்

அவிநாசி, செப்.14- அவிநாசி பேரூராட்சி முழுவதும் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் கள் அகற்றும் பணி நடைபெற்று வரு கிறது.  கடந்த  இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் பிளக்ஸ் பேனர் விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியது. இதைய டுத்து  பிளக்ஸ் பேனர் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம்  தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.  இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூர் ஆகிய பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் அனுமதியின்றி சாலையோரங்களில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை அகற்றும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை மட்டும் அகற்றி வருகிறோம். அடுத்த முறை கடுமை யாக அபராதம் விதிக்கப்படும். மேலும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.