திருப்பூர், செப். 23– தமிழகத்தில் தொழில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் டீசல் விற்பனை 5 முதல் 10 சதவிகிதம் வரை குறைந்துள்ளதாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சில் லறை விற்பனைப் பிரிவு நிர்வாக இயக்கு நர் பி.எஸ்.ரவி கூறினார். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிட்டேட் உயர் அதிகாரிகள், தமிழ்நாடு பாரத் பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியே சன் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருப்பூர், பெருமாநல்லூர் அருகே உள்ள செங்கப்பள்ளி சொர்ண மஹால் திரு மண மண்டபத்தில் அண்மையில் நடந்தது. தமிழ்நாடு பாரத் பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசன் தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் விஸ்வநாதன், திருப்பூர் மாவட்ட பெட் ரோல் டீலர்ஸ் அசோசியேசன் தலைவர் பரணி நடராஜ் ஆகியோர் முன்னிலையில் செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். இதில் பாரத் பெட்ரோலியம் கார்பொரே ஷன் சில்லறை விற்பனை பிரிவு நிர்வாக இயக்குனர் பி.எஸ் ரவி பேசுகையில், தமிழ கத்தில் தொழில் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் டீசல் விற்பனை 5 முதல் 10 சதவீதம் குறைந்து கடும் பாதிப்பு ஏற் பட்டுள்ளது. தற்போது இன்டெகரேட்டேடு பேமெண்ட் சொல்யூஷன் என்ற ஒருங் கிணைந்த பணஅளிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்குகளிலும்,கிராமம் மற்றும் சிறு நகரங்களிலும் இதை அறிமு கப்படுத்த உள்ளோம். மேலும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் வங்கியும் ஆரம்பிக்க உள்ளோம். இளைஞர்களை கவர மொபைல் மூலம் என்ட்ரி பண்ணி விட்டு பெட்ரோல் பங்கிற்கு வந்து சில நிமி டங்களில் பணம் செலுத்தாமல் பெட்ரோல் அடித்துச் சொல்லலாம் என்று கூறினார். இந்நிகழ்வில் பாரத் பெட்ரோலியம் அதி காரிகள் இந்திரஜித் சிங், ராமகிருஷ்ணன், நாகராஜன் ஆகியோர் பேசினார். தொடர்ந்து தமிழ்நாடு பாரத் பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசனின் பொதுக்குழு நடந்தது. இதில் பல்வேறு முக்கிய தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் அருணோதயம் நன்றி கூறி னார்.