tamilnadu

img

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி

அவிநாசி, அக். 4- அவிநாசி பேரூராட்சி,  அரசு கலைக்கல்லூரி மற்றும்  ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய டெங்கு காய்ச்சல் தடுப்புப் விழிப்புணர்வு பேரணி வெள்ளியன்று அவிநாசி யில் நடைபெற்றது. அவிநாசி பகுதியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பழைய டயர்கள், தேங்காய்த் தொட்டிகள் உள்ளிட்டவை அகற்றப்பட வேண்டுமென வலியுறுத்தி பதாகைகள் அடங்கிய பேரணி நடைபெற்றது. அபேட் மருந்து தெளிக் கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி அலுவலர்கள் ரமேஷ், கருப்புசாமி, மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சேகர், வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், ரோட்டரி சங்க நிர்வாகி சக்திவேல், அரசு கலைக்கல்லூரி தாளாளர் குலசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.