tamilnadu

img

எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முறையாக செயல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 2 – தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன் கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் 2105ஆம் ஆண்டு புதிய திருத்தங்களை முறையாக நடைமுறைப்படுத்த வலி யுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் ஆர்ப் பாட்டங்கள் நடத்தப்பட்டன. கொரோனா தாக்கம் தலைவிரித்து ஆடும் நிலையில் நாடு முழுவதும் ஊர டங்கு அமல்படுத்தப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிறது. இந்த இடைப் பட்ட காலத்தில் தமிழகத்தில் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மீது 70க்கும் மேற்பட்ட வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்த்தப்பட்டுள் ளன. இதில் சாதிய படுகொலைகளும், ஆணவப் படுகொலைகளும் அடங் கும். எனவே இந்த தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவும், எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 2015 புதிய திருத்தங்களின் அடிப்படையில், அந்த தாக்குதல்களை நிகழ்த்தியோர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் வன் கொடுமை சிறப்புத் தனி நீதிமன்றங் கள் அமைக்கவும், கடந்த நான்கு ஆண் டுகளாக செயல்படாமல் இருக்கும் மாநில கண்காணிப்புக் குழு, மாவட்டக் கண்காணிப்புக்குழு, கோட்டக் கண்கா ணிப்புக் குழுக்களை முறையாக கூட்டி விவாதிக்கவும் வலியுறுத்தி தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தலித் விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் பல்ல டத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட் டங்கள் நடத்தப்பட்டன.  அனுப்பர்பாளையத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் ச.நந்தகோபால், தமுஎகச மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே போல் பல்லடத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் ப.கு.சத்தியமூர்த்தி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.