tamilnadu

மனநலம் பாதித்த பெண்ணிற்கு பிறந்த குழந்தை தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைப்பு

திருப்பூர், நவ. 14- திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை யில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த குழந்தை சேலம் லைப் லைன் சிறப்பு தத்துவள மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்தில் லிடியா என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்  கடந்த நவ.2 ஆம் தேதியன்று காலையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந் தார். அவரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனு மதித்தனர். மருத்துவமனையில், அப் பெண்ணிற்கு அன்று மதியம் ஆண்குழந்தை பிறந்தது.  இந்நிலையில், குழந்தையின் தாய் லிடியா மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் குழந்தையை மருத்துவமனையிலேயே  விட்டுச்சென்றுள்ளார். இருப்பினும் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நிலையில், செவ்வாயன்று மருத் துவமனையிலிருந்து குழந்தை விடுவிக் கப்பட்டு, குழந்தையின் எதிர்கால நலன் கருதி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் மூலம் சேலம் லைப் லைன்  சிறப்பு தத்துவள மையத்திடம் ஒப்படைக் கப்பட்டது.