tamilnadu

ஊராட்சி மன்றத் தலைவர் மரணம்

அவிநாசி மே 9- அவிநாசியை அடுத்த கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து உடல் நலக்குறைவு காரணமாக  சனியன்று காலமானார். தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தல் கடந்த டிசம்பர் மாதத்தில் இரண்டு கட்ட மாக நடைபெற்றது. இதில் அவிநாசி ஒன்றியத்தில் இரண்டாவது கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கருவலூர் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற் றவர் மாரிமுத்து. இவர்  சுயாட்சையாக போட்டி யிட்டு வெற்றி பெற்றார்.  இந்த நிலையில்  உடல்ந லக்குறைவு காரணமாக  மாரிமுத்து (63) சனியன்று  காலமானார்.