tamilnadu

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம் உரிய விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், செப். 23 - திருப்பூரில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட இளை ஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்திடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரண்யா (24). இவர் படுகாயங்களுடன் கடந்த 29-ம் தேதி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந் தார். இதுதொடர்பாக காவல்துறையினர் அவரிடம் விசாரணையில், தன்னைக் கொலை செய்யும் நோக்கில் சிலர் தன் மீது சூடான வெந்நீரை ஊற்றியதாக சரண்யா கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து செப்.16 ஆம் தேதியன்று சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, ஊரகக் காவல் நிலைய காவலர்கள், மணிகண்டன் என்பவரை கைது செய்து அவரிடம் விசா ரணை நடத்தியுள்ளனர்.

 இந்த விசாரணையின்போது மணிகண் டனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக வும், அவரை திருப்பூர் அரசு தலைமை மருத் துவமனைக்கு கொண்டு செல்லுகையில் வழியில் உயிரிழந்து விட்டதாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்ட னின் உறவினர்கள், அரசு மருத்துவமனை யில் குவிந்ததோடு, காவலர்கள் தாக்கிய தால்தான் அவர் உயிரிழந்து விட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும், அரசு மருத்துவ மனைக்கு வந்த ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன், கோட்டாட்சியர் கவிதா ஆகியோ ரையும் முற்றுகையிட்டனர். இந்நிலையில், மணிகண்டனின் உயிரி ழப்பு தொடர்பாக உரிய முறையில் விசா ரணை செய்வதுடன், காவல்துறையினர் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்தார் என்ற அவரது உறவினர்கள் குற்றச்சாட்டில் உண்மை இருக்கும்பட்சத்தில் சம்பந்தப் பட்ட காவலர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.