tamilnadu

தண்டோரா போட்டு தொடர் முழக்க போராட்டம் நடத்த சாலை பணியாளர் முடிவு

 திருப்பூர், ஏப். 26 -தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க திருப்பூர் கோட்ட செயற்குழுக் கூட்டம் திருப்பூர் தெற்கு நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை கோட்டத் தலைவர் என்.சிவக்குமாரன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியம், கோட்டச் செயலாளர் ஆர்.ராமன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். சத்தியமங்கலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்ட முடிவுப்படி சாலைப் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வரும் ஏப்.30ஆம் தேதியன்று திருப்பூர் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு தண்டோரா போட்டு தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.அத்துடன் மே 28ஆம் தேதியன்று சென்னையில் முதன்மை இயக்குநர் அலுவலகம் முன்பு கோரிக்கைகள் நிறைவேற்றும்வரை குடும்பத்தோடு உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் திருப்பூர் கோட்டத்தில் இருந்து 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்வது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

;