tamilnadu

சிபிஎம் கோரிக்கை நிறைவேற்றம்

திருப்பூர், ஆக. 5 - குன்னத்தூரில் நெடுஞ் சாலையில் உள்ள வேகத் தடையில் எவ்வித அடை யாளக் கோடும் போடப் படாததால் அடிக்கடி விபத்து நேரிட்டு வந்தது. இந்த இடத்தில் வேகத் தடையை காட்டும் விதத்தில் அடையாளக் கோடு வரைய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்கும் கோரிக்கை மனு அனுப்பட் பட்டது.

இது குறித்து தீக்கதி ரிலும் செய்தி வெளியானது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேற்படி இடத்தில் வேகத் தடையில் அடையாளக் கோடுகள் வரையப்பட்டது. வேகத்தடை இருப்பதை  காட்டும் விதத்தில் இரு புறமும் வெள்ளை கோடுகளும் வரையப்பட் டன. மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று  நடவடிக்கை எடுக்கப்பட் டதற்கு சிபிஎம் குன்னத்தூர் கிளை சார்பில் மாவட்ட நிர் வாகத்திற்கு நன்றி தெரி வித்துள்ளனர்.

;