உடுமலை, ஆக. 6- உடுமலையில் உடைந்த பாலத்தை கடந்த ஐந்து ஆண்டு களுக்கு மேலாக சரி செய்யாமல் உள்ள நகராட்சி நிர்வா கத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டண பல கையை வைத்தனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை நகரச் செயலாளர் தண்டபாணி கூறியதாவது, உடுமலை, பழைய அக்ரஹாரம் பகுதியில் உடுமலை - பொள்ளாச்சி தேசிய நெடுச்சாலைக்கு செல்ல இணைப்பு சாலை ஒன்று உள் ளது.
இந்த நெடுச்சாலையை இணைக்கும் வழியில் உள்ள பாலம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக சாலை விரி வாக்க பணிகளுக்கு என்று தோண்டப்பட்ட நிலையில், பழைய கற்களை கொண்டு பெயருக்கு பாலம் அடைக்கப் பட்டது. இதனால் அப்பாலம் வழியே தண்ணீர் செல்ல முடி யாமல் சாலையில் வழிகிறது. மேலும் அப்பகுதி பொதுமக்க ளும் அவ்வப்போது விபத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக உடுமலை நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எச்சரிக்கை பலகை வைத்து உள்ளோம். மேலும், உடனடியான நடவ டிக்கை எடுக்காதபட்சம் நகராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.