tamilnadu

இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியிடம் வழிப்பறி

அவிநாசி, பிப். 20- அவினாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்ப தியிடம் வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், ராஜா வீதியை சேர்ந்த அபி புல்லா (51). பனியன் வேஸ்ட் வியாபாரியான இவர் மனைவி விஜயலட்சுமியுடன் (49) இருவரும் புதனன்று இரவு கோவையிலிருந்து திருப்பூருக்கு இருசக்கர வாக னத்தில் சென்றுள்ளனர்.இந்நிலையில், அவிநாசி அடுத்து வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு பின்னால் இரண்டு மர்ம நபர்கள் தலைகவசம் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்தனர். இந்த நிலையில் அபிபுல்லாவின் இருசக்கர வாக னத்தை முந்தி செல்லும் போது, பின் இருக்கையில் அமர்ந்தி ருந்த விஜயலட்சுமியின் கழுத்திலிருந்த 5 பவுன் தங்க சங்க லியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமா னார்கள். இதுகுறித்து அபிபுல்லா அவிநாசி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அப்புகாரின்பேரில் அவினாசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.