tamilnadu

img

கணக்கம்பாளையம் ஊராட்சியில் தலைவிரித்தாடும் ஊழல் முறைகேடு அனைத்து கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

உடுமலை, அக்.13- உடுமலையை அடுத்த கணக்கம் பாளையம் ஊராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்துக் கட்சிகள் மற்றும் குடியி ருப்போர் நலச்சங்க கூட்டமைப்பி னர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட கணக்கம் பாளையம் ஊராட்சி தலைவர் கடந்த நான்கு மாதத்தில் மட்டும் அரசு விதி முறைகளை மீறி சுமார் ரூ.23 லட்சம் வரை செலவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரின் சிறப்பு தணிக்கை ஆய்வில் கண்டறியப்பட் டுள்ளது. எனவே,  ஊராட்சி தலை வர் மற்றும் துணைத்தலைவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

 இவர்க ளிடம் உள்ள காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை உட னடியாக ரத்து செய்ய வேண்டும்.  மேலும், ஊழலுக்கு அடிப்படை காரணமாக செயல்பட்ட ஊராட்சி செயலாளரை விசாரணை செய்து, பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

சிறப்பு தணிக்கை அறிக்கை மீது முழுமையான நடவடிக்கைகள் முடி யும் வரை ஊராட்சி நிர்வாகத்தை தனி அலுவலர் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியு றுத்தி அனைத்து கட்சிகள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க கூட்ட மைப்பினர் ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

 இதனையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் போராட்டகாரர்களிடம்  பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.