tamilnadu

தமிழக கல்வித்துறையில் ஊழல் முறைகேடு - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் நிர்வாகி குற்றச்சாட்டு

திருப்பூர், ஜூன் 15- தமிழக கல்வித் துறையில் முறை கேடுகளையும், ஊழலையும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் முன்னாள் பொதுச்செயலாளர் செ.நடேசன் கடுமையாக சாடியுள்ளார்.

கல்வித்துறையில் கணக்கின்றிப் பெருகும் ஊழல்கள், காவு கொடுக் கப்படும் பள்ளி மேலாண்மைக் குழுக் கள் என்ற தலைப்பில் ஜூன் 14 அன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச்செ யலாளர் செ.நடேசன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது, தமிழ்நாட்டில் பள்ளி வளர்ச் சிப் பணிகளை மேற்கொள்ள ஒவ் வொரு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள் ளியிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கள் அரசு ஆணைப்படி அமைக்கப்பட் டுள்ளது. பள்ளி மற்றும் கல்வியின் வளர்ச்சிக்காக கல்வித்துறை வழியாக அரசு வழங்கும் ஒருங்கிணைந்த கல்வி நிதியை பள்ளியின் தேவைகளுக் கேற்ப எவ்வாறு செலவிட வேண்டும் என்பதை இந்தக்குழு கூடி தீர்மானித்து அதன்படி செயல்படுத்திட வேண்டும். பள்ளிக்கு அளிக்கப்படும் இத்தகைய ஒருங்கிணைந்த கல்வி நிதிகள் பள்ளி மேற்பார்வைக் குழுவின் தலைவர், பொருளாளர் பெயரில் வங்கியில் கூட் டுக்கணக்காக பராமரிக்கப்பட வேண் டும். ஆனால், உண்மையில் நடப்ப தென்ன? எடுத்துக்காட்டாக, பள்ளி நூலகத்துக்கு நூல்கள் வாங்கவும், மாணவிகளின் சுகாதாரத்துக்காக நாப்கின் எரியூட்டிகள் (ஒன்றின் விலை ரூ.32 ஆயிரம்) வாங்கவும், ஆங்கில மொழிப் பயிற்சிக்கான நூல்கள் வாங்க வும் இதன் மூலம் நிதி அளிக்கப்படு கிறது. ஆனால், இவற்றை பள்ளியின் தேவையைக் கணக்கிட்டு தாங்களே நேரடியாக வாங்கிவிட முடியாது என் கிற நிலைதான் தற்போது இருக்கிறது. கல்வித்துறையில் மேலே இருந்து ஒரு ரகசிய சுற்றறிக்கை ஒவ்வொரு பள் ளிக்கும் வரும். அதில், ‘பள்ளிக்குத் தேவையான நூல்கள் அல்லது மாணவிகளின் சுகாதாரத்துக்கு அவசி யமான எரியூட்டிகள் ஏற்கெனவே வாங்கப்பட்டு உங்கள் பள்ளிகளுக்கு அனுப்பட்டுள்ளன. அவற்றை பள்ளி மேலாண்மைக் குழுவே வாங்கிய தாக தீர்மானமிட்டு தேதி குறிப்பிடாத காசோலையை நாங்கள் குறிப்பிடும் நிறுவனத்துக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கை யில் ஆணையிடப்பட்டிருக்கும்.

ஆனால், அப்படி அளிக்கும் பொருள் கள் பயனற்றவைகளாக, விரைவில் பழுதடைந்து விடுபவைகளாக இருக் கின்றன. பள்ளி மேலாண்மைக் குழுவே பொருள்களின் தரத்தை ஆய்வு செய்து நேரடியாக வாங்கும்போது இத் தகைய குறைபாடுகள் நிகழ வாய்ப் புக்கள் குறைவாக இருக்கும். பள்ளி மேலாண்மைக் குழுவை அமைத்துவிட்டு, அதன் அதிகாரங் களை கையில் எடுத்துக்கொண்டு, மேலே இருந்து பொருள்களை வாங்கு பவர்கள் யார்? அவர்களுக்கு இந்த அதி காரத்தை யார் கொடுத்தது? பொருள் களை வாங்க நடத்தப்படும் பேரங் கள் என்ன? இவர்கள் நடத்தும் ஊழல் களுக்கு பள்ளி மேலாண்மைக் குழுவை ‘ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக்குவது ஏன்? கல்வி நலனிலும் மாணவர் நலனிலும் அக் கறை கொண்டுள்ள மாணவர் அமைப் புகள், இளைஞர் அமைப்புகள், ஆசி ரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் இந்த அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும் என ஏழை, எளிய மக்கள் எதிர்பார்க்கின்றனர் என அறிக் கையில் தெரிவித்துள்ளார்.

;