அவிநாசி மார்ச்.23 அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி முதல்நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 7 ஆவது வார்டில் உள்ள நெசவாளர் காலனி 2 ஆவது வீதியில் வசித்து வருபவர் மாரப்பன் (80). நெசவு தொழிலா ளியான இவர் கடந்த ஒரு வாரமாக இருமல் மற்றும் சளியால் அவதிபட்டு வந்தார். மருத்துவமனைக்கு சென்றும் குணமாக வில்லை. இதைதொடர்ந்து அருகில் இருந்த வர்கள் பூண்டி பேரூராட்சிக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து செயல்அலுவலர் குணசேகரன் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் பரமன் தலைமையில் தூய்மை தொழிலாளர்கள் குழுவினர் விஷேச உடை யுடன் அவரைப் பரிசோதிக்க வந்தனர். ஆனால், அவரது மகன் அவரை மருத்துவம னைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்து மாத்திரைகளை வாங்கி வந்தார். விசாரணையில் அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்று தெரியவந்தது. பின்னர் அந்த குழுவினர் அவரது வீட் டிற்கு கோரோனோ தடுப்பு கிருமிநாசினி மருந்து தெளித்தனர். தொடர்ந்து அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், பூண்டி காவல் நிலையம், கோவில் கள், மசூதி மற்றும் பொதுமக்கள் அதிக மாக கூடும் இடங்களிலும் மருந்து தெளிக்கப் பட்டது. அதேபோல் தேவராயம்பாளையம் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல், கோவில் உள்பட பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது. இதுகுறித்து பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது, நெச வாளர் காலனி பகுதியில் இருந்து வயதான வர் ஒருவர் தொடர்ந்து தும்மிக்கொண்டே இருப்பதாகக் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் ஆய்வு மேற் கொண்டோம். அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. நோய்க்கான அறிகுறி இருந்தாலே தகவல் கொடுத்தால் அந்த வீட்டை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.