அவிநாசி, ஆக. 5- அவிநாசியில் தனிமனித இடைவெளியைக் கடைப் பிடிக்காத பிரபல நகைக் கடைக்கு கொரோனா பறக் கும் படையினர் ரூ.25 ஆயி ரம் அபராதம் விதித்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதி முழுவதும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந் நிலையில், அவிநாசி சேவூர் சாலை கிழக்குரத வீதியில் உள்ள பிரபல நகைக்கடை யில் பொது முடக்க விதி முறைகளை மீறி திங்க ளன்று பொதுமக்கள் அதி கம் கூடினர்.
இதுதொடர் பாக அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த கொரோனா தடுப்பு பறக் கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவிநாசி வட்டாட்சியர் சாந்தி, பறக் கும் படை அலுவலர் அழகர சன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாலும் இருந்தது தெரியவந்தது. இதைய டுத்து பேரூராட்சி நிர்வாகத் தினர் நகைக்கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராம் விதித்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.