tamilnadu

பாரத் ஸ்டேட் வங்கி ஊழியருக்கு கொரோனா திருப்பூர் பிரதான கிளை மூடல்

திருப்பூர், ஜூலை 11- திருப்பூர் பாரத் ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டதால் கிளை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியின் மாவட்ட முதன்மை கிளையில் பணியாற்றிவரும் ஊழியர் ஒருவருக்கு வியாழனன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், வங்கிக் கிளை முழுவ தும் தற்காலிகமாக மூடப்படும் என வங்கி நிர்வாகம் அறிவித் தது. அதனடிப்படையில் வெள்ளியன்று வங்கி அலுவலகம் அடைக்கப்பட்டு அந்த வளாகம் முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டது.

சுகாதாரப் பணிகள் மேற் கொள்ளப்பட்டதோடு வங்கியில் பணிபுரிந்த ஊழியர் கள் அனைவருக்கும் கொரோனா   பரிசோதனை மேற்கொள் ளப்பட்டது. இதனால் வெள்ளியன்று வங்கிக்கு வந்த வாடிக் கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.