tamilnadu

img

அரசு மருத்துவருக்கு கொரோனா மருத்துவமனை மூடல்

அவிநாசி, ஆக.18- சேயூர் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் பணி யாற்றும் மருத்துவருக்கு செவ்வாயன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப் பட்ட நிலையில், மருத்து வமனை மூடப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள சேயூரில் அரசு ஆரம்ப சுகா தார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு பணியாற்றி வந்த மருத்துவருக்கு செவ்வா யன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சேயூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டு, அங்கு பணி யாற்றி வந்த 50க்கும் மேற் பட்ட செவிலியர், ஊழியர்க ளுக்கு கொரோனா பரிசோ தனை மேற்கொள்ளப்பட் டது. மேலும், அப்பகுதி முழு வதும் கிருமிநாசினி தெளிக் கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர்.