tamilnadu

கிராமத்தில் கல்லூரி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு

அவிநாசி, மே 26 - அவிநாசி அருகே உள்ள கருமாபாளை யம் கிராமத்தில், திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல் லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள், அவிநாசி அருகே உள்ள கருமாபாளையம் கிராமத்தை தத்தெடுத்து பல்வேறு தூய்மைப் பணி களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக என்.எஸ்.எஸ் மாணவர் கள், அப்பகுதியில் திங்களன்று கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டனர். இதில் கருமா பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டவர் காலனி, சிரி ராம்நகர், முத்தம்பாள் நகர், பாரதி நகர், அம்பேத்கர் காலனி ஆகிய பகுதி களில் உள்ள மக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட் டது. மேலும் மாணவர்கள் வீடு வீடாகச் சென்று, முகக்கவசம் அணிவது, குடை பிடித் தல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்பது உள்ளிட்ட கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலை வர் பூங்கொடி சக்திவேல், துணைத் தலை வர் சண்முகசுந்தரம், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் பங்கேற்ற னர். என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் நன்றி தெரிவித்தார்.