tamilnadu

கொரோனா: திருப்பூரில் வீட்டுக் கண்காணிப்பில் 172 பேர்

திருப்பூர், மார்ச் 25 - திருப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று அறி குறி இருக்கும் நிலையில் 172 பேர் வீட்டுக் கண்கா ணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் செவ் வாய்க்கிழமை மாலை 144 தடை உத்தரவு அமலாக் கப்பட்ட நிலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட க. விஜயகார்த்திகேயன் மேலும் கூறுகையில், உணவு இல்லாதவர்களுக்கு உணவு வழங்க பொது சமைய லறை அமைப்பதற்கான ஆலோசனை மாநகராட்சி யுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகப்பேறு உதவி
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண் கள் அனைவரும் மகப்பேறு குறித்து உதவிகளுக்கு ஒருங்கிணைப்பு அலுவலர் மருத்துவர் ஜெயப்பிரியா (90033 27166) அவர்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம். திருப்பூர் மாவட்ட எல்லைகள் அடைக்கப் பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

;