திருப்பூர், செப். 12 – உடல் பருமனைக் குறைக்க தொடர் உடற்பயிற்சி அவசியம் என்று திருப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்க அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 2-ம், இளைஞர் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து கடந்த சில நாட்களாக கல்லூரி மற்றும் பொது இடங்களில் ஊட்டச்சத்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரு கின்றனர். அதன் ஒரு பகுதியாக, `உடல் பருமனால் ஏற்படும் விளைவு களையும், அதிலிருந்து எவ்வாறு நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண் டும், அதற்கு தேவையான உடல் பயிற்சி’ என்ற தலைப்பில் கருத்த ரங்கு நடத்தப்பட்டது. இக்கருத்தரங் கில் அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொ) புஷ்பலதா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத் துறை மருத்துவர் லலிதாம்பிகை மற்றும் உடற்கல்வி இயக்குனர் ராஜாராம் ஆகியோர் பங்கேற்றுபேசினர். இதில் மருத்துவர் லலிதாம்பிகை பேசியதாவது: சமூகத்தில் உடல் பரு மன் அழகற்றதாகவும், ஒழுக்கமற்ற தாகவும் கருதப்படுகிறது. அதிகமாக உணவு உண்பது, உடல் உழைப்பு இன்மை மற்றும் ஆற்றலை வெளிப் படுத்தாமை போன்றவை உடல் பரு மனுக்கு காரணங்களாக உள்ளன. உடல் பருமனால் உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், மூட்டு வலி, மாரடைப்பு, மலட்டுத்தன்மை போன்ற நோய்கள் ஏற்படுகிறது என்றார். உடல் பருமனை எவ்வாறு கட்டுப்ப டுத்துவது என்ற தலைப்பில் உடல் கல்வி இயக்குநர் ராஜாராம் பேசுகை யில், உடலை மதிக்க வேண்டும். தினந் தோறும் உடற்பயிற்சி செய்ய வேண் டும். உடற்பயிற்சியை மைதானத்தில் செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஏனென்றால் இயற்கை காற்றை சுவாசித்து பயிற்சி செய்தால் புத்துணர்வு ஏற்படும் என்றார். இந்நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணி (தெற்கு),தங்க வேல் (வடக்கு), பேராசிரியர்கள் விநா யகமூர்த்தி, பாலசுப்பிரமணியம் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். முடிவில் மாணவ செயலர் சந்தோஷ் நன்றி தெரி வித்தார். முன்னதாக இந்நிகழ்வில் உடல் பருமனிலிருந்து விடுபட பல் வேறு உடற் பயிற்சிகள் செய்து காண் பிக்கப்பட்டது.