tamilnadu

பேராசிரியர் அன்பழகனுக்கு இரங்கல்

அவிநாசி, மார்ச் 7-  திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சனியன்று சென்னையில் காலமானார்.  இவரின் மறைவை யொட்டி அவிநாசியில் திமுகவினர் நூற்றுக்கும் மேற் பட்டோர் அவரது படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி னர். முன்னதாக, அவிநாசிலிங்கேசுவர் தேர் நிலை அருகி லிருந்து கோவை சாலை, மேற்கு ரதவீதி, சேயூர் சாலை மற்றும் கச்சேரி வீதி வழியாக அமைதி ஊர்வலம் சென்று வ.உ.சி. திடலை அடைந்தது. இந்த இரங்கல் கூட்டத்தில் திமுகவின் பொன்னுச்சாமி, சரவணன் நம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றிய கவுன்சிலர் முத்துசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ஈஸ் வரமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் நவநீத கண்ணன், வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.