tamilnadu

img

மகசூலை அதிகரிக்க தென்னை டானிக் 

உடுமலை, அக். 17- தென்னையின் மகசூலை அதிகரிக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (டிஎன்ஏயு) தென்னை டானிக்கை வேர் மூலம் செலுத்துவது எப்படி? என்பது குறித்து விவசாயிகளுக்குச் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவையில் நான்காம் ஆண்டு இளநிலை பயிலும் மாணவிகள், கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் உடுமலையில் தங்கி சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் குறித்து பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக வியாழனன்று சின்னவீரம் பட்டியில் சுமார் 25 விவசாயிகளுக்கு தென்னை டானிக்கை வேர் மூலம் செலுத்தி மகசூலை அதிகரிப் பது குறித்த செயல்முறை விளக்கத்தை அளித்த னர்.  இதுகுறித்து மாணவிகள் கூறுகையில்,  டிஎன்ஏயு தென்னை டானிக் என்பது தென்னைக்கு தேவை யான ஊட்டச்சத்துகள் அனைத்தும் கலந்த மருந்தா கும். ஒரு மரத்திற்கு 200 மில்லி வீதம் ஆறு மாதங்க  ளுக்கு ஒருமுறை வேர் மூலமாக கொடுத்தால்  மரத்தின் பச்சையம் கூடி, குரும்பை கொட்டுதல் குறைந்து, காயின் எடை மற்றும் பருப்பின் எடையும் கூடும். மேலும் பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இவ்வாறு வேர் மூலம் செலுத்த மரத்தில் இருந்து 2 அடி தொலைவில் சுமார் 4 அங்குல ஆழத்தில் பென் சில் கனமுள்ள வேரையே தேர்ந்தெடுக்க வேண்டும். அதனைச் சாய்வாக சீவி தென்னை டானிக் அடங் கிய பையின் அடிவரை வைத்துக் கட்டிவிட வேண்டும். மேலும் மழை அல்லது பாசனத்திற்கு முன்பு மண்ணில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் பொழுதே மரம் விரைவாக டானிக்கை எடுத்துக் கொள்ளும்” என்றனர்.