திருப்பூர், மார்ச் 8 - குடியுரிமைத் திருத்தச் சட்டப் பிரச்ச னையில் இந்திய நாட்டை மிகப்பெரும் குழப்பத்திற்குள் மத்திய அரசு தள்ளியுள் ளது என்று மனித உரிமை செயல்பாட்டா ளர், எழுத்தாளர் ச.பாலமுருகன் கூறி னார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொங்கலூர் கிளை சார்பில் பொங்கலூர் தனியார் திரு மண மண்டபத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் - என்பிஆர் - என்ஆர்சி அறிதல் முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. கிளைத் தலைவர் சி.சின்னச்சாமி தலை மையில் நடைபெற்ற இம்முகாமில் கிளைச் செயலாளர் ஏ.கே.செந்தில்குமார் வரவேற் றார். தமுஎகச மாநில செயற்குழு உறுப்பி னர் ஆர்.ஈஸ்வரன் தொடக்கி வைத்துப் பேசினார். இதைத் தொடர்ந்து எழுத்தாளர் ச.பால முருகன் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து உரையாற்றுகையில் கூறியதா வது, உரிமை என்பது யாரோ கொடுத்து, மற்றவர்கள் கேட்டுப் பெறுவதல்ல. இந்திய அரசியல் சட்டத்தில் உரிமைகளை அங்கீகரிப்பதாகத்தான் குறிக்கப்பட்டுள் ளது. கொடுப்பதாக சொல்லப்பட வில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கூட, அரசுக்கு எதிராக செயல்படக் கூடாது, எழுதக் கூடாது, கருத்து தெரி விக்கக் கூடாது என எதிர்மறையான அர்த் தத்தில் தான் உரிமைகளைப் பற்றி குறிப் பிட்டார்கள். எனவே உரிமை என்பது கேட்டுப் பெறக்கூடியதல்ல. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது இரு பக்கமும் ஏற்பட்ட மதக்கலவ ரத்தில் 10 லட்சம் பேர் கொல்லப்பட்ட னர். ஏராளமான பெண்கள் பாலியல் வன் முறைக்கு ஆளாக்கப்பட்டனர். இந்திய அர சியல் சட்டத்தில் குடியுரிமை குறித்து பிறப்பு, பெற்றோர், இயற்கையான முறை, பதிவு செய்வது உள்ளிட்ட ஐந்து அம்சங் கள் மூலம் குடியுரிமை பெறலாம் என சொல்லப்பட்டது. 1986ஆம் ஆண்டு குடியு ரிமைச் சட்ட திருத்தத்தில் பெற்றோரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை வழங்க வழி செய்தது. மதத்தின் அடிப்படையில் குடியுரிமை என்று குறிப்பிடப்பட வில்லை. ஆனால் 2003ஆம் ஆண்டு வாஜ் பாய் தலைமையில் இருந்த அரசு பெற்றோ ரில் யாரேனும் ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினராக இருந்தால் அவர்களது குழந்தைக்கு குடியுரிமை தரக் கூடாது என திருத்தம் செய்தது. பெற்றோ ரில் ஒருவர் சட்டவிரோத குடியேறியாக இருந்தால், பிறக்கும் குழந்தை என்ன செய்யும்? தேசிய குடிமக்கள் பதிவேட்டின் ஓர் அங்கமாக தேசிய மக்கள்தொகை பதி வேடு கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. எனவே குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி, என்பிஆர் ஆகியவை தனித்தனியானவே, வேறு வேறானவை என சிலர் சொல்வது உண்மையல்ல. இவை ஒன்றோடு ஒன்று இணைந்திருக் கும் சங்கிலியின் கண்ணிகளாகும். மதத்தின் அடிப்படையில் ஒரு நாடு ஒன்றுபட்டு இருக்க முடியாது என்பது தான் பாகிஸ்தான், வங்கதேசம் பிரிந்ததின் அனுபவம் ஆகும். நாடு பிரிவினையின் போது காங்கிரஸில் இருந்த அபுல்கலாம் ஆஸாத், கான் அப்துல் கபார்கான் உள் ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் மத அடிப்ப டையில் பிரிவினையை ஏற்கவில்லை. அஸ்ஸாமில் என்ஆர்சியின் படி 19 லட்சம் பேர் குடியுரிமை அற்றவர்களாவர். அதில், 12 லட்சம் பேர் வங்கத்தைச் சேர்ந்த இந்துக்கள். பாஜகவுக்கு வாக்களித்த இந்து வாக்கு வங்கியாக இருந்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால்தான், இந்துக்களுக்கு குடியுரிமை அளிக்கும் நோக்கத்தில் தற்போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் 5 ஆண்டுகள் இங்கி ருந்தவர்களுக்கு குடியுரிமை தரலாம் என திருத்தினர். ஆனால் அஸ்ஸாமில் உள்ள வர்கள் அதை ஏற்கவில்லை. அங்கும் போராட்டம் தொடர்கிறது. மேலும், குடியுரிமையை எந்த ஆவணத் தின் அடிப்படையில் ஏற்றுக் கொள் வது என்பதிலும் நீதிமன்றங்கள் தெளி வான தீர்ப்பு அளிக்கவில்லை. நீதிமன் றங்களைக் கூட ஏதேனும் ஒரு வகையில் மிரட்டும் சூழல் உள்ளது. 1950ஆம் ஆண்டு அரசியல் அமைப்புச் சட்டப்படி வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. அரசியல் சட்டப்படி வாக்களித்த மக்கள் தேர்ந்தெ டுத்தப் பிரதமர் இப்போது, வாக்களித்த மக்களின் குடியுரிமையைத் தீர்மானிக்கி றார். குடியுரிமை இல்லாதவர்கள் வாக்க ளித்தனர் என சொன்னால், அவர்கள் அளித்த வாக்கும் செல்லாததாகிவிடும், அப்படியானால் பிரதமரும் பதவியில் நீடிக்க முடியாத, சந்தேகத்துக்கு உரியவ ராகி விடுவார். அரசியல் அமைப்புச் சட்ட அவையில் இந்த நாட்டை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என சிலர் வற்புறுத்தினர். ஆனால், தேச விடுதலையில் மதம், இனம் கடந்து பல தரப்பினரும் போராடி விடு தலை பெற்றிருக்கிறோம் என விரிவான விவாதத்துக்குப் பிறகுதான் இந்து மத நாடாக அறிவிக்கக் கூடாது என மதச் சார்பற்ற உள்ளடக்கத்துடன் அரசியல் சட்டம் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், தற்போது இந்துக்களுக்கு எதி ரானது அல்ல என குடியுரிமை சட்டத்தைச் சொல்கின்றனர். ஆர்எஸ்எஸ்-ஐ பொறுத்தவரை மனு தர்மத்தின்படி நால் வர்ண அடிப்படையை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள்தான் இந்துக்கள் என்கிறது. எனவே நாமெல்லாம் இந்துக்கள் என உரிமை கொண்டாட முடியாது. ஆண்ட பரம்பரை என்று தற்போது தங்களைச் சொல்லிக் கொள்ளக்கூடியவர்களைக் கூட ஆர்எஸ்எஸ் நால்வர்ண அடிப்படை யில் பிராமணர்கள், சத்ரியர்களாக ஏற்றுக் கொள்வதில்லை. உலகில் குடியுரிமையைத் தீர்மானிப்ப தில் மதத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரே நாடு இஸ்ரேல்தான். யூத மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அங்கு குடியுரிமை வழங்கப்படும். ஆனால் இஸ்லாமைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக பாகிஸ்தா னிலோ, ஈரானிலோ, ஈராக்கிலோ வெளி நாட்டினர் யாரும் குடியுரிமை பெற்றுவிட முடியாது. 1973ஆம் ஆண்டு 13 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு நீதிமன்ற அமர்வு அரசியல் சாசனத்தின் மேலாண்மையை உறுதி செய்துள்ளது. அத்துடன் நாடாளு மன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறையின் தனித்தனியாக அதிகாரத்தையும், ஒன்றை ஒன்று மேலாதிக்கம் செய்ய முடியாது என் பதையும் உறுதி செய்துள்ளது. மதச்சார் பின்மை, கூட்டாட்சியையும் உறுதி செய் துள்ளது. இந்த 13 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை தற்போது யாரும் மீற முடியாது. எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதி ரானது, நாட்டில் குழப்பம் ஏற்படுத்தக் கூடி யது. நாட்டில் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி, ேலையில்லா திண்டாட்டம், நிதித்துறை நெருக்கடி, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை போன்ற பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பத்தான் இந்த பிரச்சனையை மத்திய ஆட்சியாளர்கள் கையில் எடுத்துள் ளனர். இந்த சட்டத்தின் தீங்கைப் புரிந்து கொண்டவர்கள் போராடுகிறார்கள். மற்றவர்களும் இதைப் புரிந்து கொண்டு போராட வேண்டும் இவ்வாறு ச.பாலமுரு கன் கூறினார். இதில், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பெண்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.