tamilnadu

திருப்பூரில் இன்று செந்தொண்டர் பேரணி எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி. பங்கேற்கிறார்

திருப்பூர், நவ. 16 - திருப்பூரில் 102ஆவது நவம்பர் புரட்சி தினம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக் கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செந்தொண்டர் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் இப்பேரணியின் நிறைவாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றுகிறார். மண்ணுலகில் சோசலிச சமுதாயம் சாத்தியம் என்பதை நிரூபித்துக் காட்டிய ருஷ்யப் புரட்சி தினம் நவம்பர் 7ஆம் நாள் ஆகும். ஆண்டுதோறும் நவம்பர் 7 புரட்சி தினம் உலகெங்கும் உழைக்கும் மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருப் பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி தினத்தை முன் னிட்டு கடந்த சில ஆண்டுகளாக பிரம் மாண்டமான செந்தொண்டர் பேரணி நடத் தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி யாக இந்த ஆண்டு 102ஆவது புரட்சி  தினமும், இந்திய கம்யூனிஸ்ட் இயக் கத்தின் நூற்றாண்டு விழாவும் சேர்த்து  பிரம்மாண்டமான பேரணி நடத்தப்படு கிறது. திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் முன்பிருந்து மாலை 4 மணிக்கு இந்த செந்தொண்டர் பேரணி தொடங்குகிறது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக யுனிவர்சல் திரையரங்கம் அருகே பேரணி நிறைவடைகிறது. அங்கு நடை பெறும் பிரம்மாண்டமான பொதுக் கூட் டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர், மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் எழுத்தாளர் சு. வெங்கடேசன் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல்,  மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.  நகரெங்கும் பல்வேறு பகுதிகளில் செங் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பேரணி பொதுக்கூட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்று வெற்றி பெறச் செய்யும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.