tamilnadu

img

தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி

திருப்பூர், பிப். 8- திருப்பூரில் தொழில் நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்து பார்வை யிட்டார். திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட ரங்கில், சனியன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சிறுபான்மையினர் நல விடுதியில் தங்கி பயிலும் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாண வியர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை  மாவட்ட  வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார் துவக்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, மாணவ, மாணவியர் கள் அனைவரும் கல்லூரியில் படிக்கும் போதே போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியினை மேற் கொள்ள வேண்டும். மேலும், கல்லூரி படிப்பு முடிந்த பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதனை சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டுமெனவும், மாணவ, மாணவியர்களின் நலனுக்காக அரசு அளிக்கின்ற திட்டங்களை தாங்கள் நல்ல முறையில் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில்பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான 24 விடுதிகளில் தங்கி பயிலும் 300 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.   இந்நிகழ்வின் போது, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சாகுல்ஹமீது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சி.சுப்பிரமணியன், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.