திருப்பூர், ஜூன் 20 - திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் பயிற்சிக் கூடக் கட்டிடம் கட்டப்படுகிறது. திருப்பூர் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு எதிரில் அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிற்பயிற்சி நிறுவன முகப்புப் பகுதி கட்டிடத்துக்கு முன் பகுதியில் உள்ள இடத்தில் தொழிற் பயிற்சிக்கான கூடுதல் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் இக்கட்டிடம் பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படுவதாக ஐடிஐ நிர்வா கத்தினர் தெரிவித்தனர். எனினும் முகப்புப் பகுதியில் இந்த கட்டிடம் கட்டப்படுவதால் ஐடிஐயின் நுழைவுப் பகுதியே மறைக்கப்பட்டுவிடும். அத்துடன் இந்த வளாகத்தின் பின்புறம் ஏராளமான இடம் இருக்கும் நிலையில் முகப்புப் பகுதியில் நுழைவாயில் அருகி லேயே இந்த கட்டிடத்தைக் கட்ட இடம் தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வி எழு கிறது. மேலும் இந்த இடத்தில் மண் தன்மை மிகவும் நெகிழ்வாக இருப்பதால் ஏறத்தாழ 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி இதில் கட்டிட அடித்தளம் அமைக்க உள்ளனர். ஆனால் இந்த நிலப்பகுதியில் நீர்க்கசிவு இருப்பதால் தண்ணீர் குளம் போல் தேங்கி இருக்கிறது. அதனுடன் ஒரு பகுதியில் ஏற்றத்தாழ்வான பாறையும் இருக்கிறது. இந்த இடத்தை சமப்படுத்தி அடித்தளம் அமைப்பதற்கே பெருமளவு செல வாகும், அத்துடன் கட்டிடத்தின் உறுதித் தன்மையும் பாதிக்கப்படக்கூடிய நிலை உள்ளது.
பல்வேறு வகையிலும் பொருத்த மில்லாமல் தோன்றும் இந்த இடத்தைத் தேர்வு செய்தது குறித்துக் கேள்வி எழுகிறது. இது குறித்து பொதுப்பணித் துறை அதி காரிகள் ஆய்வு செய்ததாகவும், ஐடிஐயின் வட பகுதியில் இருக்கும் நிலப்பரப்பு கட்டு மானத்திற்கு தகுதி இல்லாததாக இருப் பதால் முன்பகுதியில் இருக்கும் இந்த இடத்தைத் தேர்வு செய்ததாக தெரி வித்தனர். ஆனால் நுழைவுக் கட்டிடத்தின் பின்பகுதியில் ஏராளமான காலி இடம் இருக்கிறது. அது பாறைப் பகுதியாகவும் உள்ளதால் அங்கு இந்த பயிற்சிக் கூடத்தைக் கட்டினால் செலவைக் கட்டுப் படுத்த முடிவதுடன், கட்டிடம் உறுதியாக நீடித்து நிலைக்கும் வாய்ப்புள்ளது. ஏனோ அதிகாரிகள் அந்த இடத்தைத் தேர்வு செய்யவில்லை. இந்த இடத் தேர்வு தொடர்பாக பொதுப்பணித் துறை பொறி யாளர்களுக்கு இடையிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், ஆனால் சிக்கலான இடத்தையே தேர்வு செய்துள் ளனர். இதற்கு பின்னணியில் என்ன காரணம் என்பது தெரியவில்லை என்றும் ஐடிஐ வட்டாரத்தினர் கூறுகின்றனர். அத்துடன் கட்டுமானப் பணி நடைபெறும் இடம் பெரிய பள்ளமாக இருக்கும் நிலையில் தினமும் பயிற்சிக்கு வந்து செல்லும் மாணவர்கள் பாதுகாப்பையும் உத்தரவாதம் செய்ய வேண்டும், தரமான முறையில் இந்த கட்டிடத்தைக் கட்ட வேண்டும் என மாணவர்கள் எதிர் பார்ப்பதாகக் கூறினர்.