tamilnadu

img

பிஎஸ்என்எல் ஊழியர்கள் கைது: கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், நவ. 3 - கடலூரில் தொலைத் தொடர்பு ஒப்பந் தத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப் பட்டதைக் கண்டித்துப் போராட்டம் நடத் திய பிஎஸ்என்எல் ஊழியர்களை காவல் துறை கைது செய்துள்ளது. ஜனநாயகரீதி யாக நியாயம் கேட்டுப் போராடிய பிஎஸ் என்எல் ஊழியர்களைக் கைது செய்ததைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மெயின் தொலைபேசி நிலை யம் முன்பு செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தின் கிளைத் தலைவர் வாலீசன் தலைமை வகித்தார். இதில், பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் சங்க மாநில அமைப்பு செய லாளர் பா.சௌந்தரபாண்டியன், பிஎஸ் என்எல் ஊழியர் சங்க உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம், தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

கோவை

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பிஎஸ் என்எல் அலுவலக வளாகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொலைத்தொடர்புத் துறை ஒப்பந்த ஊழி யர் சங்கத்தின் செயலாளர் ஓ. ராமச்சந்தி ரன் தலைமை வகித்தார். ஊழியர் சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் பி.தங்க மணி, பொள்ளாச்சி வட்டக்கிளை செயலா ளர் ஆர்.பிரபாகரன், ஒப்பந்த ஊழியர் சங் கத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் அண்ணாதுரை, ஓய்வூதியர் சங்கத்தின் பொறுப்பாளர் மாகாளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.