திருப்பூர், பிப்.27- பாஜக பேரணியின் மூலம் தங்களது கடைக ளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி பிரி யாணி கடை உரிமையாளர்கள் காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியினர் கடையடைப்பு, பேரணி போன்ற நிகழ்வுகளின்போது, அப்பகுதிக ளிலுள்ள கடைகளில் பிரியாணி அண்டா, உணவுப் பொட்டலங்கள் ஆகியவற்றை திருடிச் செல்கின்ற சம்பவம் தமிழகம் முழுவதும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியினர் வெள்ளியன்று (பிப்.28) பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், பாஜக பேரணி மூலம் தங்களது பிரியாணி கடைகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, தங்களுக்கும், தங்களது பிரியாணி கடைக ளுக்கும் உரிய பாதுகாப்புத் தரக்கோரி திருப்பூர் பிரி யாணி கடை உரிமையாளர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து புகார் மனு அளித்தனர்.