திருப்பூர், மார்ச் 24 – பீகார் மாநிலம், முஸாபர்பூரில் இருந்து பல்லடம் தெற்குப்பாளையம் தனியார் மில்லுக்கு வேலைக்கு வந்த இளைஞர் காய்ச்சல் அறிகுறியுடன் இருந்ததால் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டார். முஸாபர்பூரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (19). பல்லடம், தெற்குப்பாளையத்தில் உள்ள தனியார் மில்லுக்கு வேலைக்கு வந்த இவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து பல்லடம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.