திருப்பூர், செப். 26 - திருப்பூரில் சிறுஅள விலான பனியன் நிறு வனம் நடத்தி வந்த வர், போதிய வேலை இல்லாததால் விரக்தி அடைந்து நிறுவனத்தி லேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காஜா உசேன் (37). இவர் திருப்பூர் காங்கேயம் ரோடு ராக்கியா பாளையம் பிரிவு வள்ளியம்மை நகர் பகுதியில் சிறிய அளவில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் தொழில் நலிவடைந்த சூழ்நிலையில் சொந்தமாக நிறுவனம் நடத்துவதை கைவிட்டு, ஒப்பந்த அடிப்படையில் பணியினை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணி மேற்கொண்டதிலும் தனக்கு தேவையான அளவு ஆர்டர் கிடைக்காத விரக்தியில் இருந்தார். தீபாவளி நெருங்கும் நேரத்தில் ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தாலும் போதிய ஆர்டர் கிடைக்க வில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் வெளியில் கடன் பெற்று தொழில் நடத்தி வந்த சூழ்நிலையில், தற்போது கடன் கட்ட முடியாமல் நெருக்கடி அதிகரித்தது. இதில் மனவிரக்தி அடைந்த காஜா உசேன் புதன்கிழமை இரவு வள்ளியம்மை நகரில் உள்ள தனது நிறுவனத்திலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வியாழனன்று காலை காஜா உசேன் தூக்கில் தொங்கியதை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பனியன் தொழிலில் ஈடுபட்டுவந்தவர் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொழில் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற் படுத்தி உள்ளது.