tamilnadu

img

பெயரளவில் நடைபெற்ற பட்டியல் இனத்தவருக்கான விழிப்புணர்வு கூட்டம்

அவிநாசி, ஜூன் 18- அவிநாசி அடுத்த சேவூர் ஊராட்சியில் பட்டியல் இனத்தவருக்கான விழிப்புணர்வு கூட்டம்  பெயரளவில் செவ்வா யன்று சேவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடை பெற்றது. பட்டியலினத்தவர்கள் வீடுகளில் கழிப்பறை இல் லாத காரணத்தால் ஒதுக் குப்புறமான இடங்களுக்குச் செல்லும்போது பாலியல் வன்கொடுமைக்கு உள் ளாக்கப்படுகின்றனர். அதனைத் தடுப் பதற்கு பொதுக்கழிப்பிடம் கட்டுவது தொடர்பாகவும், பட்டியல் இனத்தவர் களுக்கு தனி சுடுகாடு, இடுகாடுகளுக்கு கூரை வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும்.  பட்டியலினத்தவர்கள் வசிக்கும் பகுதியில் போதிய சாலை வசதி, மின்சார வசதி, குடி நீர், பள்ளிக்கூடம், அங்கன்வாடி, நியாய விலைக்கடை, சமூக நலக்கூடம், சாக்கடை,  விவசாயம் மற்றும் இதர தொழில் செய் வோர்களுக்கு  தேவையான வசதிகள் செய்து  தரவும்,  மருத்துவம் மற்றும் வசதிகள் போக்கு வரத்து ஆகிய குறைவின்றி செய்து தர  விழிப்புணர்வுக் கூட்டம் திருப்பூர் மாவட் டத்தில் வாரம் ஒரு ஊராட்சியாக நடத்தப் பட்டு வருகின்றன.  அதன்படி சேவூர் ஊராட்சி மன்ற அலுவ லகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற கூட்டத்திற்கு, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவைச் சேர்ந்த துணை காவல்  கண்காணிப்பாளர் கலிவரதன் தலைமை  தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் சாந்தி லட்சுமி, சேவூர் காவல்துறை உதவி ஆய்வாளர் ஷாஜகான், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக் குமார், கிராம நிர்வாக அலுவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இக்கூட்டம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், போதிய விழிப்புணர்வு இன்றி  இக்கூட்டம் நடைபெற்றது.  சேவூர் ஊராட்சி யில் பந்தம்பாளையம், கிளாகுளம், ஒச்சா பாளையம்,பாலியகாடு, குறவர் வீதி,  ஏடி  காலனி பகுதிகளில் போதிய அடிப் படை வசதிகள்  ஏதும் இல்லை. இந்த  விழிப்புணர்வு கூட்டத்திற்காக தகவல்  அனைவருக்கும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் பெயரளவில் கருத்துக் கேட்புக் கூட்டமாகத்தான் நடைபெற்றது என தெரிவித்தனர்.  இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் சேவூர் வடக்கு வீதியில் சுடுகாட்டிற்கு போதிய  சாலை வசதி இல்லாமலும், இருக்கும் சாலை மேடு, பள்ளமாகவும் உள்ளது. எனவே சாலையை செப்பனிட வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வேகத் தடை அமைத்து தர வேண்டும் என  விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட  பட்டியலின பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.