tamilnadu

அவிநாசி : 400 குடும்பங்களுக்கு இலவச மளிகைப் பொருட்கள் விநியோகம்

 அவிநாசி, ஏப்.25- அவிநாசி அருகே நடுவச்சேரி கிராமப் பகுதியில்  திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் 400 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை இலவசமாக வினியோகம் செய்தனர். அவினாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் வறுமையில் உள்ள 400 குடும்பங்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி, கால் கிலோ பருப்பு, அரை லிட்டர் சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கே.சி. வரதராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி மன்ற உறுப்பினர் கே. ரங்கசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.