tamilnadu

img

ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்கிட கோரிக்கை

திருப்பூர், ஏப் 9-
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா 19 வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு  பிறப்பித்திருக்கும் தற்போதைய சூழலில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் அறிவிப்பு செய்திருக்கிறார்கள். இந்நிலையில் தாராபுரத்தில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திய ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு தினக்கூலி எதுவுமில்லாமல் உணவுக்கு வழியின்றி வீட்டில் மிகவும் வறுமையில் முடங்கிக் கிடக்கின்றனர். தமிழக முதல்வர்  ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணத் தொகையும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு செய்தார்.

அது பற்றி தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது, முதல்வரின் அறிவிப்பு சுற்றறிக்கை வரவில்லை என்று தெரிவித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டனர். நிவாரணத் தொகையும் மளிகை பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் குடும்பங்கள் கேள்விக்குறி நிலையில் உள்ளனர். மேலும் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மட்டுமே முதல்வர் அறிவிப்பு பொருந்தும் என்று சில செய்திகள் வருகின்றன. பல்வேறு இக்கட்டான காலகட்டத்தில் கூட  மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் முறையாக (license, insurance,fc, permit) பின்பற்றி வரும் எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் வழி வகை செய்ய வேண்டும் என்று   கேட்டுக்கொள்வதாக  தாராபுரம் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் பொதுநல சங்கம் கூறியுள்ளது.