tamilnadu

img

ஸ்ரீ சக்தி பள்ளியில் தடகளப்போட்டிகள்

அவிநாசி, நவ. 23 – சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கான 42வது தடகளப் போட்டிகள் தெக்க லூர் ஸ்ரீ சக்தி இண்டர்நேஷ னல் பள்ளியில் நடைபெற் றது. நவம்பர் 20 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து 75 பள்ளிகளைச் சேர்ந்த 2250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஓட்டப் பந்தயம், நீளம் மற்றும்  உயரம் தாண்டுதல், தடை தாண்டிய ஓட்டம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் மேட்டுப்பாளையம் எஸ்எஸ்விஎம் பள்ளி ஒட்டு  மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. நேஷனல் மாடல் பள்ளி 2ஆம் இடமும், பிஎஸ்பிபி மில்லினியம் பள்ளி 3ஆம் இடமும் பெற்றது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை நடை பெற்ற பரிசளிப்பு விழாவில், இந்திய தடகள வீரரும், டோக் கியோ ஒலிம்பிக்ஸ் 2020 ல் 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க  உள்ளவருமான ஆரோக்கிய ராஜீவ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். விழாவில் ஸ்ரீசக்தி இண்டர்நேச னல் பள்ளி துணைத் தலைவர் தீபன் தங்கவேலு, கோயம் புத்தூர் சகோதயா அமைப்புத் தலைவர் நவமணி, துணைத் தலைவர் சுகுணா தேவி, செயலாளர் கீதா லக்ஷ்மணன் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.