tamilnadu

img

உடுமலை சைனிக் பள்ளியில் தேசிய மாணவர் படை பயிற்சி முகாம்

உடுமலை, ஆக. 24- அமராவதி நகர் சைனிக்  பள்ளியில் தேசிய மாணவர் படை ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் நடை பெற்றது. உடுமலை அருகே அம ராவதி நகர் சைனிக் பள்ளியில் தேசிய மாணவர் படையின் ஒருங்கிணைந்த 10 நாள் பயிற்சி முகாம்  வெள்ளியன்று நிறைவ டைந்தது. இம்முகாமில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 296 பேர் கலந்து கொண்டனர். துப்பாக்கிச் சுடுதல், டென்ட் அமைத்தல், முதல் உதவி செய்தல், பல்வேறு தடைகளைக் கடத்தல், வரைபடம் வாசித்தல் மற்றும் போர் களத்தில் எதிரிகள் உள்ளே வராமல் தடுக் கவும் முன்னேறிச் செல்வது என்பது போன்ற  பயிற்சியும் வழங்கப்பட்டன. பயிற்சி முகாமில் கோவை மண்டல் தேசிய மாணவர் படை கமாண்டர் கர்னல் எல்சிஎஸ் நாயுடு, பாதுகாப்புத்துறையில் இளைஞர்கள் சேர்ந்து பணியாற்றுவதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறி மாணவர்கள் தங்களை தயார் செய்து ராணுவத்தில் அதிகாரிகளாகப் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தார்.