திருப்பூர், டிச. 8- திருப்பூர் இறைச்சிக் கடைக ளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, ஆடுகளை அதற்கென உருவாக் கப்பட்டுள்ள ஆடுவதை கூடங் களில் மட்டுமே வெட்ட வேண்டும் என இறைச்சி கடை உரிமையா ளர்களுக்கு அறிவுறுத்தினர். திருப்பூர் மாநகராட்சிக்குட் பட்ட தாராபுரம் சாலை, கோவில் வழி, ஒத்தகடை, கே.எஸ்.சி. பள்ளி சாலை, நொய்யல்வீதி, பள்ளி வாசல் வீதி, புது சாலை, காங்கே யம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆட்டு இறைச்சி விற்பனை கடைகளில் மாவட்ட உணவு பாது காப்புத் துறையினர் ஞாயிறன்று சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கே.விஜ யலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கவேல், கேசவராஜ் உள்ளிட் டோர் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். மொத்த மாக 32 ஆட்டு இறைச்சி கடைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த இறைச்சி கடை களுக்கு நோட்டீஸ் அளிக்கப் பட்டது. மேலும் அனைத்து இறைச்சி கடை உரிமையாளர்களுக்கும் ஆடுகளை அதற்கென உருவாக் கப்பட்டுள்ள ஆடுவதை கூடத்தில் மட்டுமே வெட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக உணவு பாது காப்புத் துறையினர் கூறும்போது, ஆடுகளை ஆடுவதை கூடத்தில் மட்டுமே வைத்து வெட்ட வேண் டும். இறைச்சிகளை கண்ணாடி பெட்டிகளில் வைத்து பாதுகாப் புடன் விற்பனை செய்ய வேண் டும். இறைச்சி தொங்க விடப்படும் கொக்கிகள் துருப்பிடிக்காத இருப் பினால் ஆனதாக பயன்படுத்த வேண்டும். வெட்டு பலகைகளை முறையாக சுத்தம் செய்து பயன் படுத்த வேண்டும். இறைச்சி கழி வுகள் முறையாக அப்புறப்படுத் தப்பட வேண்டும். இறைச்சிகளை கட்டிக் கொடுக்க அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது. ஆடு, கோழிகள் வெட்டப்படுவதை பிற ஆடு மற்றும் கோழிகள் பார்க்காத வகையில் தனியாக வைத்திருக்க வேண்டும் என இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு அறிவு றுத்தி இருக்கிறோம் என்றனர்.
குன்னத்தூர்
குன்னத்தூர் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள், மளிகை கடை கள், பேக்கரிகள், உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள், தேநீர் கடைகள் ஆகியவற்றில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் சனி யன்று ஆய்வில் கெட்டுப்போன மீன் இறைச்சி, காலாவதியான உணவுப்பொருட்கள், பாலித்தீன் பைகள் மற்றும் கலப்பட தேயி லைத்தூள் ஆகியவை கண்டறி யப்பட்டது. குன்னத்தூர் பகுதியில் உள்ள 12 கடைகளில் ஆய்வு செய்யப்பட் டதில் இரண்டு கடைகளில் கெட் டுப்போன மீன் இறைச்சி 10 கிலோ கண்டுபிடிக்கப்பட்டு அழிக் கப்பட்டது. மளிகை, பேக்கரி கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகளை ஆய்வு செய்ததில் 12 கிலோ பாலித்தீன் பொருட்கள், 1 கிலோ கலப்பட தேயிலைத்தூள் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டு அழிக்கப்பட்டதாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தெரி வித்தனர்.