உடுமலை, மடத்துக் குளம் தாலுகாவில் 2.5லட்சம் இருசக்கர வாகனங்கள், 75 ஆயிரம் கார்கள், 2,500 லாரிகள் மேலும் ஆட்டோ, இலகு ரக சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் உள்ளன. உடுமலையில் உள்ள பகுதி நேர வட்டாரப் போக்குவரத்து அலுவ லகத்திற்கு ஓட்டுனர் உரிமம், புதிய வாகனப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்காக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லுகின்றனர். ஆண் டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருவாய் கொடுக்கும் உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் புதி தாக இருசக்கர , நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாக னங்களை இயக்கி ஓட்டுனர் உரிமம் எடுப்பதற்கு விண்ணப் பித்தவர்கள் அதிகாரிகள் முன் னிலையில் வாகனத்தை ஓட்டி காட்ட முறையான இடம் இல்லா ததால் வாகன ஓட்டிகள் அருகில் உள்ள திறந்த வெளி மற்றும் மண் சாலையில் வாகனத்தை ஓட்டி காட்ட வேண்டி இருந்தது. இந்நிலையில் ஓட்டுனர் உரி மம் பெற எட்டு, சாய்வுதளம் மேடு, வலது, இடதுபுறம் திரும்புதல் உள்ளிட்ட போக்குவரத்து விதி களை முறையாக பின்பற்றும் வகையில், ரூ. 89 லட்சம் மதிப்பில் நவீன டெஸ்ட் டிராக் உடுமலை வட்டார போக்குவரத்து ஆய்வா ளர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டது. இந்த ஓடு தளம் பயன்பாட்டிற்கு வந்தால் சோதனை ஓட்டம் முழுவதும் டிஜிட்டல் முறையில் கண்காணிக் கப்படும். மேலும் வாகன ஓட்டு நர்களின் செயல்பாடுகள் அனைத் தும் ஓடுதளத்தில் பொருத்தப் பட்டுள்ள கேமிராக்கள் மூலம் கம்ப்யூட்டர் திரையில் முறையாக கண்காணிக்கப்பட்டு மதிப்பெண் கள் வழங்கப்படும். மேலும் வாகனத்தை ஓட்டிக்காட்டா மலும், சாலை விதிமுறைகளை தெரிந்து கொள்ளாமலும் ஓட் டுனர் உரிமம் பெறுவது தவிர்க் கப்படும். நவீன ஓடுதளம் கட்டும் பணி நிறைவடைந்துவிட்ட நிலை யில், இன்னும் கேமிரா உள்ளிட்ட கணினி மயமாக்கும் பணிகள் நடைபெறவில்லை. ஓராண்டாக சோதனை ஓடுதளம் பயன்படுத் தப்படாமலும், பராமரிக்கப் படா மலும் உள்ளது. மக்கள் பயன் பாட்டிற்காக அமைக்கப்பட்ட அதி நவீன ஓடுதளத்தில் கேமிரா பொருத்தி, முழுமையாக கணினி மயமாக்கிப் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக் கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது! -கே.மகாதேவன்