tamilnadu

img

திருப்பூரில் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்

திருப்பூர், ஜூலை 30 - பிளாஸ்டிகிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் பன்னாட்டு நிறுவனங்களின் முத்திரையிட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் எவ்வித தடையுமின்றி தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் வீதிகளிலும், நீர்நிலைகளிலும், கழிவுநீர் கால்வாய்களிலும் கொட்டப்படுகின்றன.  திருப்பூர் அவிநாசி சாலை அனுப்பர்பாளையம் புதூர்  வேலம்பாளையம் சாலை பிரிவில் இருக்கும் கழிவுநீர் கால்வாயில் ஏராளமான பிளாஸ்டிக் பைகளும், பாட்டில் களும் கொட்டப்பட்டு நீர் போக்கைத் தடுக்கும் வகையில் உள்ளன. வழக்கமாகவே மழைக் காலத்தில் இந்த இடம் மிக மோசமாக பாதிக்கப்படும். எனவே இந்த கால்வாயில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.