அவிநாசி, அக். 29- சிறு வணிக கடன் வழங்கக்கோரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வடுகபாளையம் பொது மக்கள் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், வடுகபாளையம் ஊராட்சிக் குட்பட்ட பகுதியில் வாழும் பெண்கள் கொரோனா காலத் தில் வேலையின்றி, வருமானம் இன்றி குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தொடக்க ேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறு வணிக கடன் அல்லது வியாபார கடன் வழங்க கேட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர் சி.சின்னச் சாமி தலைமையில் சங்க செயல் அலுவலரிடம் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்தனர். இதில், வடுகபாளை யம் வார்டு உறுப்பினர் கே.ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.பழனிச் சாமி, கிளை செயலாளர் பொன்னுச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.