திருப்பூர், ஆக. 28 - அருந்ததிய சமூக மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உரிமை உள்ளது என உச்சநீதி மன்ற உத்த ரவை வரவேற்று திருப்பூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாப்பட்டது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டில், அருந்ததியர் சமூக மக்களுக்கான 3 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்று இந்த உள் இட ஒதுக்கீட்டை உறுதிப்ப டுத்தி உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. உச்சநீதி மன்றத் தீர்ப்பை வரவேற்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திரு ப்பூர் மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால் அருந்ததிய சமூ கத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச் சியைப் பகிர்ந்து கொண்டார். இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் துணைச் செயலாளர் சண்முகம், திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த முகில் இராசு, ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி விடுதலைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.